ஞாயிறு, 7 நவம்பர், 2010

வெள்ளி, 5 நவம்பர், 2010

நான் ஏன் இப்படி ஆனேன்













journey of man from ordinary man to half dressed extraordinary human in INDIA...

எல்லாருடைய பயணமும் ஏதோ ஒரு இலக்கை நோக்கியே இருகின்றது . நாம் இந்த வாழ்க்கையை ஏதோ ஒன்றை செய்வதற்காகவும் அதனை இந்த மண் உலகுக்கு தருவதற்காகவே வாழ்கிறோம் . கோக்ஹலே என்னிடம் நீ இந்த இந்திய திருநாட்டை சுற்றினால் தன் உனக்கு இந்த தேசத்தின் தேவைகள் மற்றும் தன்னுடைய மக்களின் வாழ்க்கைமுறை பற்றி தெரியும் .

அவர் கூறியது உண்மை மட்டுமல்ல அதுவே என்னை இன்று இயக்கி கொண்டு இருக்கிறது . என்றுமே நம்மால் ஒரு வியசத்தை தெளிவாக புரிந்து கொள்ளவில்லை . பயணம் என்பது உடல் களைப்பு உண்டாக்குவது அல்ல . உங்கள் மனதை புத்துணர்வு பெற செய்வதற்காக . எனது பயன்கள் முலம் அதையே நான் பெற்றேன் . இந்த பரந்து விரிந்த தேசத்தில் மக்கள்படும் துயரங்களும் அவர்களின் வாழ்க்கையும் இந்த முன்றாம் வகுப்பு பிரயாணம் உணர்த்தியது .

நான் ஏற்கனவே ஒரு முறை மதுரைக்கு வந்து இருந்த பொழுது மக்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்திருந்தார் . இந்த முறையும் அதுபோன்ற ஒரு சீரிய முயற்சியில் பிரிட்டிஷ் அரசை எதிர்பதற்கு ஒன்று சேர்ந்து இருப்பதாக தகவல் வந்துள்ளது . இந்த முன்றாம் வகுப்பு பிரயாணம் மற்ற அனைத்து வகை பயணங்கள் மாறுபட்டு இருக்கிறது . முதலில் இதில் ஏழை மக்கள் வருகின்றனர். அதுமட்டுமின்றி மக்களை ரயில் நிலையங்களில் சந்திப்பதால் எனக்கு மக்களிடம் ஒரு பரிச்சியம் ஏற்பட்டு இருப்பதாகவே எண்ணுகிறேன் .

தென்னாப்ப்ரிகவில் ஒரு முறை பீட்டர்சும்புர்க் நகரில் காவல்துறை நண்பர் மிகவும் அன்பாக நடந்து கொண்டார் . அது எனக்கு புது அனுபவத்தை கற்று கொடுத்தது . அமைதி என்பதன் முலம் எதையும் உடனடியாக சாதித்து விட முடியாது . தண்ணீர் என்பது மிகவும் அமைதியானது , அமைதி ஆன அந்த தண்ணீர் ஒன்று சேர்ந்தால் அது உண்டாக்கும் அழிவினை யாராலும் matra முடியாது .

அது போலவே எனக்கு இந்த அமைதி அதிக நண்பர்களை எனக்கு எதிரிகளிடமும் பெற்று கொடுத்தது . என்னுடைய இந்த பயணம் தென்னாப்ப்ரிகவை தாண்டி ஒவ்வொரு இடத்திலும் மக்களின் ஒத்துழைப்புடன் நடந்து வருகிறது . நான் இம்முறை ஏற்ற பயணத்தின் திட்டமானது அரசுக்கு ஏதிராக மக்களை ஓர் அணியில் திரட்டவே ஆகும். எனக்கு இந்த பயணத்தில் சாதாரன மக்கள் ஆதரவாகவே இருந்து வந்தனர் .

என் நண்பர்கள் ஏன் காந்தி ஒவ்வொரு முறையும் ரயிலில் மூன்றாம் வகுப்பில் சென்று வருகிறார் என கேட்டனர் . எனக்கு ஏழை மக்களுடன் அளவளவியாதே பிடித்து இருந்தது . நான் அங்கு நடைபெறும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் நடந்தே செல்வேன் . அப்பொழுது என்னை அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே என்னை நடத்தினார்கள் . நான் அந்த மக்களின் உணர்வை புரிந்து கொள்ளவும் அவர்களிடம் கற்று கொண்டேன் .

ஒரு முறை ஆற்றை கடந்து செல்லும்போது எங்களுடன் வந்த பெண்மணி ஒருவர் தன் குழந்தையை ஆற்றில் தவறவிட்டார் . அப்பொழுது அந்த ஆறு இரைச்சலாக ஓடிக்கொண்டு இருந்தது . அந்த பெண் உடனடியாக “சிக்கிரம் செல்வோம் நமக்கு நேரமாகிறது , குழந்தையை காப்பாற்ற முடியாது ” என தைரியமாக கூறி எங்களை அந்த இடத்திற்கு அழைத்து சென்றார் . அந்த பெண்ணிடம் இருந்தே எதையும் தாங்கும் சக்தியையும் எதையும் எதிர் கொள்ளும் மனப்பான்மையும் வந்தது என சொல்லலாம். இதை எல்லாம் நான் அமைதியான ஒரு இடத்தில் இருந்து யோசிப்பதை விட இந்த மக்களின் நடுவில் யோசித்தால் அது எனக்கு மட்டும் இன்றி அனைவர்க்கும் செல்லும் . அவர்களது எண்ணமும் எனக்கு புரியும் என்பதாலேயே நான் எப்பொதும் இதை செய்துவருகிறேன் .

இதை எல்லாம் அசைபோட்டபடியே ரயிலில் சென்று கொண்டுஇருந்தேன் , ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தை வந்தடைதந்து . நான் இறங்கும் இடம் சென்று சேர இன்னும் நான்கு மணி neram ஆகும் . நான் தென்னாப்ரிக்காவில் தமிழர்களுடன் பழகி இருக்கிறேன் , அதன் முலம் எனக்கு ஓர் அளவு தமிழை புரிந்து கொள்ள முடியும். ஏனினும் என் மொழிபயர்ப்பாளர் அங்குள்ள மக்கள் கூறும் உரையாடல்களை மொழிபெயர்த்து வந்தார் . ரயில் பல பகுதிகளை கடந்து சென்று கொண்டிருந்தது.

ரயில் சென்று சேர வேண்டிய இடத்தை (மதுரை) அடைய இன்னும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் இருந்த பொழுது அங்கு இருந்த கிராமத்தில் நின்று கொண்டு இருந்தது . இது போன்று பல இடங்களில் ரயில்கள் நின்று செல்லும் ஆதலால் பயண நேரம் நிர்ணைக்க முடியாமல் இருந்தன. அதனால் இந்த பயணத்தில் ஏழைகள் மிகவும் துயரபட்டனர் , ஆனால் ஆட்சியில் உள்ளவர்களுக்கும் அவர்கள் உடன் இருந்தவர்களுக்கும் இது சுகமான பயணமாக இருந்தது அவர்கள் இதில் ஓய்வு எடுத்து கொண்டனர் .

நான் அந்த பகுதி வயல்களை பார்வைஇட்டேன் , அது செழிப்பு நிறைந்த பகுதியாக இருந்தது . நெற்பயிர்களும் தென்னை மரங்களும் அந்த பகுதி முழுவதும் நிறைந்து இருந்தது . இனிமையான காற்றும் அதனை சுற்றி இருந்த மலை பகுதியும் அந்த இடத்திற்கு அழகு சேர்த்தது . அந்த இடத்தில் சில மணிநேரம் தங்கலாம் என என் மனதிற்குபட்டது . ஆனால் ரயில் உடனடியாக புறப்பட்டடு விட்டது .

என் மனைவி என்னை அழைத்தார், தண்ணீர் கேட்டு வாங்கி கொண்டேன். ஆனால் நான் அதற்கு காட்சியை பார்த்த பிறகு எனக்கு ஒரு குளம் நிறைய தண்ணீர் வேண்டும் என புலப்பட்டது . அந்த இடத்தின் அழகை விட நான் பார்த்த காட்சிகள் எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்கின.

நான் பார்த்த காட்சியை என்னால் நம்பமுடியவில்லை , அவர்கள் அந்த அரை துணியை அணிந்து கொண்டு அந்த வயல்களில் உழன்று கொண்டு இருந்தனர் . அந்த உழைப்பில் தங்கள் migavum கடினமாக தங்கள் குடும்பத்தை உயர்த்த வேண்டும் என்ற உண்மை தெரிந்தது . அங்கு நடந்த உழைப்பு அல்லாத விசையத்தை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை . அந்த இடத்தில் நான் பார்த்த வளத்திற்கும் அங்கு நடந்து கொண்டு இருந்த மக்களின் வாழ்க்கைக்கும் மிகவும் வித்தியாசம் இருப்பது புலப்பட்டது . அந்த இடத்தை நான் கடக்க ரயிலுக்கு ஐந்து நிமிடம் தேவைப்பட்டது . சரியாக தொழில் செய்யும் ஒரு மனிதனால் தன் குடும்பத்திற்கு ஏற்ற வருமானத்தை அவர் பெற முடியும் . இது நான் பல இடங்களில் நான் கண்ட உண்மை .

எனக்கு பல சந்தேகங்கள் பிறந்து கொண்டு இருந்தது , எந்த ஒரு மனிதனும் நல்ல உடைகளையே அணிய விரும்புவான் . நான் பல இடங்களில் எளிமையாக உடை உடுத்தும் நபர்களை கண்டு இருக்கிறேன் . ஆனால் அவர்களும் கூட எளிமையான சற்று காலம் பயன்படுத்திய உடைகளையே அணிவர் . ஆனால் இங்கு சீரிய முறையில் சிறந்த இடத்தை உருவாக்கி விவசாயம் செய்து வரும் intha மக்கள் ஏன் இது போன்ற உடைகளை உடுத்துகிறார்கள் என்ற எண்ணம் மனதை குடைந்து கொண்டிருந்தது . எத்தனை உழைக்கும் விவசாயிகள் துயரபடும் பொழுது தான் இந்த அரசாங்கம் intha நாட்டை எம் முறையில் இந்த மக்களை வஞ்சித்து கொண்டிருக்கிறது என புலப்பட்டது .

ரயில் மதுரையை வந்தடைதந்து , நான் மதுரை ரயில் நிலையத்தை விட்டு செல்ல சிறுது நேரம் தேவைபட்டது . நான் பார்த்த காட்சிகள் என் மனதை குடைந்து கொண்டு இருந்தது . எனது மொழிபெயர்ப்பாளர் மெட்ராஸ் மாகாணத்தை பற்றி கூறினார் . என்னால் தெளிவான ஒரு முடிவுக்கு வர முடிந்தது . என்னை பொறுத்த வரை மக்கள் பஞ்சத்தில் சாகவில்லை, இந்த அரசாங்கம் oru மறைமுக போரை இந்த நாட்டின் மேல் ஏவி இருப்பதாய் புரிந்து கொள்ள முடிந்தது.

மாகாணத்தில் உள்ள நிலங்கள் அனைத்தும் இரு வகையாக பிரிக்க பட்டு உள்ளது ஜமிந்தர் மற்றும் பெருநிலகிழார் இடம் ஒரு வகையும் , மிக சிறிய அளவாக தனி பிரிவு மக்களிடம் nilangal குடுக்க பட்டு இருந்தது . ரெண்டாம் வகை முழுக்க பிரிட்டிஷ் அரசிடம் வருகிறது . ஆனால் இவர்கள் தனிப்பட்ட ஒரு அதிகாரி மூலமே நிர்வகிக்கபடுகின்றனர் .

முதலாம் வகை பிரிவுலே தான் அதிகமான மற்றும் நல்ல தண்ணீர் வசதி உள்ள இடங்கள் இருந்தன. இங்கு மக்களிடம் நேரடியாக மக்களிடம் கொள்முதல் செய்யபட்டது . Inthu அந்த நிலபகுதி ஜமிந்தர் மற்றும் அவருடைய நபர்களே விலையை நிர்னையிகின்றான் . இதன் முலம் மக்களுக்கு உள்ள சுதந்திரம் பறிக்கபடுகிறது . இது மட்டும் இன்றி உற்பத்தி பெருக்கத்திற்கும் அவர்கள் கருவியாக ஆக்கபடுகின்றனர் . இதனால் அவர்களுக்கு சொற்ப வருமானமே கிடைக்கிறது . சரியாக நிர்ணயிகபடாத விலையால் பெரிதும் விலை எதுவும் யாரும் புரிவது இல்லை .

இதே அதிகாரிகள் மட்டும் அதிகாரத்தில் உள்ளவர்கள் வறட்சி போன்ற கடும் சூழ்நிலைகளில் மக்களுக்கு தேவைபடுவதை தர மாறுகின்றனர் . அதை ஏற்றுமதி செய்வதிலேயே பெரும் குறிக்கோள் ஓடு இருக்கின்றனர் . எவர் ஒருவர் அந்த ஊரின் பெரிய மனிதரோடு இருக்கிறாரோ அவரே சற்று பணம் படைத்தவராக இருக்கிறார் . மக்களிடம் பெறப்படும் பொருள் முற்று பெற்ற பொருள்களாக மக்களளுக்கு பெரும் விலைக்கு விற்கபடுகிறது . இதனால் சொற்ப வருமானமும் காலியாகிறது . இரண்டாம் வகையினர் ஓரளவு பராவில்லை எனினும் அவர்கள் தேவை படும் பொழுது இரண்டு பேர் இடமும் வரி செலுத்த வேண்டி வந்தது . ஆயினும் இந்த எண்ணிக்கை மிகவும் சொற்பமே .

இது போல மக்கள் படும் துயரங்களை முன்னமே அறிந்திருந்த போதிலும் வளமை வாய்ந்த பகுதி மக்களும் துயரபடுவதை இப்பொழுதே காண முடிந்தது . நான் இப்பொழுது ஒரு முடிவுக்கு வர வேண்டியவன் ஆனேன் .

நினைவுக்கு வந்த பொழுது எனது மேல் கோட் மற்றும் சட்டை ஆடுவதை காண முடிந்தது . இந்த விசயங்களை சிந்தித்த பிறகு நான் அந்த அங்கியை அணிந்து கொள்ள வெட்க maga இருந்தது .

நான் யாருக்கு எதிராக போராடுகிறானோ அவரை போலவே உடையை உடுத்தி கொண்டு நான் யாருக்காக போராடுகிறானோ அவர்களை விட்டு விலகி நிற்கும் துணிகளை உடுத்தும் எனது போக்கு எனக்கு சரி இல்லை எனபட்டது . நான் எனது பெட்டியில் வைத்து இருந்த வேட்டியை எடுத்து முடிவுக்கு வந்தேன் . இன்றில் இருந்து நான் இதையே எனது உடையாக அணிந்து கொள்ள முடிவு செய்து உள்ளேன் . நான் எப்போதும் மக்களில் ஒருவனாகவே இருக்க ஆசைபடுகிறேன் . இந்த போராட்டத்தில் விலகி நின்று குரல் இடுவதை விட மக்களில் ஒருவனாகவே இருக்க முடிவு செய்து விட்டேன் . எனது இந்த முடிவு மற்றவர்கள் நிர்பந்தத்தால் என்றும் மாறாது.

இதை ஒரு விரதமாக ஏற்று கொள்ள எண்ணுகிறேன் . என்று இந்த தேசத்தில் உள்ள அனைத்து ஏழை மக்களும் வளம் பெறுகிறார்களோ அன்று என் விரதத்தை முடித்து கொள்கிறேன் . நான் ஏன் எப்படி ஆனேன் என்று பலருக்கு சந்தேகம் தொடரலாம் , இது ஒரு தனி மனித தவம் .

புதன், 3 நவம்பர், 2010

மாற்றம் 60௦ ஆண்டுகளில்














தனி மனிதன் ஒருவனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்துடுவோம்-பாரதி
எது வந்து அழித்தாலும் தனி நபருக்கு குறைந்த விலையில் எதையும் தரமுடியாது-மன்மோகன் சிங்

செவ்வாய், 2 நவம்பர், 2010

காந்தி கண்ட இந்திய ராஜ்ஜியம்-இன்றைய நிலை

காந்தி உள்ஆட்சியை பரவலாக கேட்டார், இன்று

உள்ளே மிகவும் படர்ந்த ஆட்சியாகி விட்டது

காங்கிரஸ் கட்சியை சுதந்திரத்துடன் கலைக்க சொன்னார் , இன்று

அது முழுதும் கலைந்து கிடக்கிறது

அனைத்து கிராமங்களும் தன்னிறைவு பெறவேண்டும் என்றார்

அனைத்தும் தண்ணீர் இரைவு பெற்றுவிட்டது

கிராமங்கள் சேர்ந்து நகராக விருப்பட்டார்

நகரங்கள் இன்று கிராமத்தை ஆக்ரமிப்பு செய்கின்றன

அனைத்து அலுவலர்களும் எளிமையாக இருக்க வேண்டினார்

சுவிஸ் வங்கியில் இந்தியாவின் பணம் முதலிடம்

எல்லாவற்றிற்கும் மேலாக எளிமையே வலிமை என்றார்

அவரின் படம் போட்ட பணம் உலகம் முழுவதும்

விழித்து இருக்கிறது நமது தூக்கத்தில்.

ஊழலின் தொடர்ச்சி



















காலம் மாறினால் கடமை மாறுமா? நிச்சியமா முதலில் காமன்வெல்த் இன்று ஆதர்ஷ் ஊழல் பெருகிறது கூடவே மக்களின் மறதியும்