வியாழன், 24 மார்ச், 2011

மக்களின் தேர்தல்

காட்சிகள் மாறுகின்றன! மக்கள் மாறுகிறார்கள்! சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் என்ற பார்வை விலகுகின்றன. மக்களின் பார்வை சமுதாயம் என்ற கோட்டில் இருந்து தான் என்ற பாதைக்கு சென்று விட்டது. இந்த கட்டுரையை எழுதும் நான் கூட தேர்தல் கமிஷன் போல ஆகி விட்டேன். அப்பொழுது நம் நாடு இப்படி இருந்து என பலது சொல்ல கேட்டு இருக்கிறோம். இன்று(23.03) பகத் சிங் அவர்களின் நினைவு நாள். அவர் நம் நாட்டிற்காக செய்த தியாகம் எத்தனை நண்பர்களுக்கு ஞாபகம் இருக்கிறது, தன் நாட்டிற்காக அனைத்தையும் துறந்து உயிரை விட்டவரை நம்மில் எத்துனை பேரை நமக்கு தெரிகிறது. தேச சேவையில் அத்துணை பெரும் மக்கள் திரண்ட பொழுதும் சிலர் ஆங்கிலேயர்களிடம் பயன் பெற்றனர். அதன் அளவு இன்று பெருகி விட்டது. அது மட்டுமே வித்தியாசம், பதவி உட்பட அனைத்தும் இன்று சந்தைக்கு வந்து விட்டது.
சிறுது நாட்களுக்கு முன்பு ஒரு திரைப்படம் பார்த்தேன், அதில் " இந்த நாட்டுக்கு தேவை படுவது ஒரு தலைவர் தான், அரசியல்வாதி அல்ல. தலைவர் என்று கூகுள் இணைய பக்கத்தில் தட்டினால் ரஜினி பெயர் தான் முதலில் வருகிறது. தமிழ் நாட்டின் நிலைமை தற்போது அனைவர்க்கும் புரிந்து இருக்கும். பகவத் கீதை சொல்கிறது " ஒரு குடும்பம் நன்றாக இருக்க அக்குடும்பத்தில் ஒருவன் அழிவதில் தவறு இல்லை, ஒரு கிராமம் நன்றாக இருக்க ஒரு குடும்பம் அழிவதில் தவறு இல்லை, ஒரு நகரம் நன்றாக இருக்க ஒரு கிராமம் அழிவதில் தவறு இல்லை". நான் இது அனைத்தும் இருக்க வேண்டும் அரசியல் என்ற கேடு கெட்ட தொழில் அழிய வேண்டும் என்றே வேண்டுகிறேன். நம் மக்களில் எத்தனை பேர் சரியான ஒரு நபரை தேர்ந்து எடுத்து விட்டேன் என சொல்கின்றனர்?. நல்ல தலைவர்களும் மக்களால் உதாசீன படுத்த படுகிறார்கள். சிறிது காலமாக ஒரு புதிய கலாச்சாரம் பரவி வருகிறது, எவர் அதிக இலவசம் தருகிறார்களோ அவரே இந்த நாட்டின் முதல்வர். நம் தாத்தா காலத்தில் அன்பளிப்பு பெறுவதே லஞ்சமாக கருத பட்டது, இன்று லஞ்சம் வாங்குவது அன்பளிப்பு பெறுவது போல் ஆகி விட்டது. ஊழல் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. நம் நாட்டின் பணம் பெருகி வருகிறது, நம்முடைய கருவுலத்தில் இல்லை, சுவிஸ் நாட்டில், நமது பணத்தின் அளவு அதிகரித்து வருகிறது. நம் நட்டு மக்கள் புழுத்து போன அரிசி கூட இல்லாமல் மரணம் அடைகின்றனர். ஆனால் நம் அரசியல்வாதிகள் நல்ல உணவை பேரவைகளில் சாப்பிட்டு விட்டு நன்றாக தூங்கி போகின்றனர். மக்கள் ஆகிய நாமமும் அப்படி ஆகி கொண்டு இருக்கிறோம். ஒரு தொகுதியில் 500 ருபாய் வங்கி கொண்டு நல்ல மனிதர் ஒருவரை தோற்கடித்தனர்.
கொடுத்த லஞ்ச பணம்= 500 ருபாய்
மொத்த நாட்கள் = 1826 (leap year addition 1 day)
ஒரு நாளைக்கு = 500/1826 = 0.28 பைசா
ஒரு நாளைக்கு நம்மால் 50 பைசா கூட சம்பாதிக்க முடிய வில்லை எனில் நாம் இந்த உலகில் வாழ்வது எதற்கு?
வேளைக்கு உணவு மட்டும் சாப்பிடாமல் நாட்டை பற்றிய செய்தியையும் தெரிந்து கொள்வோம்.

மேற் கூறிய அனைத்து கேள்விகளுக்கும் பதில் அவன் செய்கிறான் நானும் செய்கிறேன். ஒருவன் மாறுவதால் இந்த உலகம் மாற போவதில்லை. ஆம் இந்த உலகம் தனி பட்ட ஒருவனால் மாற்ற முடியாது. குப்பை ஓரமாக இருப்பதை சகித்து கொள்ள முடியாத எத்தனை பேர் குப்பை பொருட்களை அதில் கொட்டுகிறோம்.நாம் மாறுவோம். சமுதாயம் என்பது இங்கு இருப்பவர்கள் கூறுவது போல ஜாதி அல்ல. ஒட்டு மொத்த உயிர் இனம் இந்த பூமியில் வாழ்வது. ஏன் எனில் ஒரு உயிர் இனம் அல்லது அதன் பிரிவை அழித்தால் மற்ற இனங்கள் பாதிக்க படும். அது போலவே அரங்கேறுகின்றன. ஒரு குடும்பம் மட்டும் அனைத்து பதவி மற்றும் செல்வங்களையும் அள்ளுகிறது. ஆனால் இதற்க காரணம் அரசியல் வாதி அல்ல மக்கள் ஆகிய நாம் தான். சரியான நேரத்தில் நமக்கு தரப்பட்ட வாய்ப் பை நாம் அடகு வைத்து கொண்டோம். அதுவே இன்று பூதகரமாகி விட்டது. தக்க பாடம் சொல்லி தராத ஆசிரியர்கு என்றுமே மதிப்பு இல்லை. அது போலவே நம் மக்களும் ஆகி விட்டனர்.
லஞ்சம் வாங்குவது நற்செயல், ஊழல் செய்வது ஒரு சிறந்த தர்மம், மக்களை ஏமாற்றுவது ஒரு மனித தன்மை உள்ள செயல். இதுவே இன்று புது மொழி. அரசாங்க ழியர்கள் தான் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று இன்று மக்களும் போட்டி போட்டு கொண்டு வாங்க ஆரம்பித்து விட்டனர். ஆதலால் நாம் அனைவருமே இன்று ஊழல் பெருச்சாளிகள் தான், அடிக்கும் பணத்தின் அளவில் மட்டுமே மாறுபாடு. நாட்டுக்காக வாழ்ந்த மக்களை விடுத்து நிழல் முகங்களை பார்க்க நேர்ந்ததலே நாமும் மாறி போய் விட்டோம். ஒரு நாள் நாம் அனைவரும் மாற வேண்டும் அது ஏப்ரல் 13 ஆக இருக்கட்டும். ஒரு நாள் நலவனாக வாழ்வதற்கு இன்றில் இருந்து விரதம் இருப்போம். ஊர் குடி தான் தேர் இழுக்க முடியம் என்ன நண்பர்கள் ஆகிய உங்களை அழைக்கிறேன்.
உங்கள் அன்பு நண்பன், பாரதி

புதன், 23 மார்ச், 2011

கதா நாயகன்

இந்த நபர் திரு. பிரவீன் குமார் , தலைமை தேர்தல் அதிகாரி. இந்த தேர்தலை மிக சரியான பாதையில் செலுத்தி கொண்டு இருக்கிறார். சினிமா நாயகர்கள் அரசியல்வாதிகளிடம் சரண் அடைந்த பொது அவர்கள் அனைவரும் இவர்டிம் பயந்து பொய் உள்ளனர்...

வியாழன், 17 மார்ச், 2011

தேர்தல்


வருது வருது புலி வருது, என் வாழ்கை மாற போகுது,

என் கஷ்டம் தீர போகுது, என் கடன் தீர போகுது, என்

பிள்ளைக்கு நல்ல வாழ்வு வர போகுது என நினைக்கும்

அத்தனை வாக்காளர்களுக்கும் திருநெல்வேலி அல்வாவும்,

திருப்பதி நாமமும் இலவசமாக தேர்தலுக்கு பின் தர படும்

- அனைத்து கட்சி தலைவர்கள் அறிக்கை

பணம் தங்களுக்கு சரியாக வந்து சேரவில்லை அதற்கு தேர்தல் கமிஷன் தான் காரணம் என மக்கள் பரபரப்பு புகார்.

பி.கு. இது கலைஞர் சொல்லி வெளியட்ட செய்தி அல்ல...

வாக்கை தேர்வு செய்வது எப்படி


தேர்தலில் வாக்குகளை யாருக்கு பதிவு செய்ய வேண்டும். ஓர் உதாரணம்: இரண்டாம் உலக போரின் போது பிரிட்டனை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றவர் சர்ச்சில் ஆனால் போருக்கு பின் வந்த தேர்தலில் அட்லி தான் வெற்றி பெற்றார். நமக்கு யார் தேவை என்று இது போன்று ஆராய்ந்து வாகளித்தால் நம் நாடு கண்டிப்பாக சரியான பாதையில் செல்லும்.